Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Friday, October 8, 2010

சிவயோகசாரம் 07


சிவயோகசாரம் 07

சிவயோகசாரம் 06க்கு கருத்துரையிட்டிருந்த திரு. ஜெகதீஷ் அவர்களுக்கு பதில் கருத்துரை இட்ட பின்னர் எனக்குள் சாரல் மழை போன்ற இனம்புரியாத ஆனந்தம் தோன்றிய வண்ணம் இருந்தது. சிறிது நேர தியானத்தின் பின் உருவானதுதான் இந்த பதிவு சிவயோகசாரம் தொடர்ந்து படித்துவரும் இதனையும் படிக்க வேண்டுகின்றேன். சிவயோகசாரத்தின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம்.

இணையத்தில், இந்த அருட்சிவம் வலைப்பதிவின் கருத்துக்களைப் போன்று எண்ணற்ற ஆன்மீக அன்பர்கள் வலைப்பதிவுகளையும், இணைய தளங்களையும் நிறுவி நிர்வகித்து வருகின்றார்கள்.
நான் (எனும் எனது ஆத்மா), இச்சமயம் மானசீகமாக, அவர்களின் திருக்கரங்களை எனது கையில் எடுத்து, கண்களில் ஒற்றிக் கொள்கின்றேன்.

வாழ்க அவர்கள் நீடூழி!.
வளர்க அவர்களின் பணி!.

ஆனந்த வள்ளல் எனும் வலைப்பூவில் ஆனந்ஜோதி என்பவர் வாசியோகம் பற்றியும் மற்றும் பல விஷயங்களையும் எழுதியுள்ளார். மற்றும் அவரின் www.ourguru.net லும் நிறைய ஆன்மீக விஷயங்களை கூறியுள்ளார். மேலும் PDF வடிவில் சில மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய இணைப்புகளையும் கொடுத்துள்ளார்.
இவ்வலைதளத்தை காணும் திரு. ஜெகதீஷும் மற்ற ஆன்மீக அன்பர்களும் மேற்படி மின் நூலினை தரவிறக்கம் செய்து படித்து, தெளிந்து, பயன்பெற வேண்டுகின்றேன்.

இங்கே அன்னார் அவர்களின் தளத்திலுள்ள இரு மின் நூல்களை குறிப்பிடுகின்றேன்.  


 1. ஆத்ம தரிசனம் 
(PDF File, winzip file-ஆக சுருக்கப்பட்டுள்ளது File Size 26.1 MB)


2. அன்னையின் அருள்வழி
(PDF File, winzip file-ஆக சுருக்கப்பட்டுள்ளது File Size 14.3 MB)
மேற்படி நூல்களில் உள்ள சில வரிகளை JPG வடிவில் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.

 

இதே போன்ற ஒத்த எண்ணமுடையதுதான் இந்த அருட்சிவம் வலைத்தளமும்.

முதலில் ஆனந்த வள்ளல் தளத்திற்கு செல்லுங்கள், படியுங்கள்.
http://anandavallal.blogspot.com/

பின்னர்
http://ourguru.net/publications.aspx இந்த முகவரியில் சென்று மேற்கூறிய இரு மின்நூல்களையும் மற்ற மின்நூல்களையும் தரவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும்.
திரு. ஆனந்ஜோதியின் மற்றொரு தளம் இது
http://anandjothi.info
http://anandjothi.info/AboutUs.aspx
About Anand Jothi என்பதில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

//...Anand Jothi is a collection of disciples of Sathguru Dr. Nithyanandam. It is a spiritual organization whose values underlie the experience and messages of all the prophets down the ages across all religions and times in history.

We pay tribute to the Divine Cosmic Mother, who sustains the world and the Rishis and saints who uphold her principles for this world and beyond.

We believe:

There is a supreme, all encompassing force, divine and benevolent, called by different names by different religions.

All religions lead to the same goal and everyone of them deserves equal respect.

Every soul is originally and ultimately divine in nature, whatever attire it may wear in between.

There are methods by which every human being is capable of speeding up the process of realising the universal Truth and every soul making a sincere attempt in this direction will recieve Divine protection and help....//
 
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை.

பரம்பொருளே!,
அருட்சிவமே!,
என் தந்தையே!,
ஆனந்த கூத்தாடுகின்றேன்!,
நான் ஆனந்த கூத்தாடுகின்றேன்!!..........


மேற்படி மின்நூல்களை தரவிறக்கம் செய்து படித்து பார்த்துவிட்டு, அதை உருவாக்கியவர்களுக்கும், இந்த தளத்திற்கும் தங்களது கருத்துக்களை கருத்துரையாக இட வேண்டுகின்றேன்.
சிவயோகசாரம் தொடர், தொடர்ந்து வெளிவரும்.

3 comments:

  1. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. என் இனிய நண்பருக்கு,

    யோகப்பதையில் நடக்கும் அனைவருக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன். தங்கள் மேல் எந்த வருத்தமும் இல்லை. மாறாக, மிக்க மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய இந்த மின்நனஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டீர்களானால் மேலும் தொடரலாம்.
    kesavan1944@gmail.com.

    அன்பு வணக்கங்கள்.
    கேசவன்.

    ReplyDelete
  3. @ Anonymous ( திரு.கேசவன்)
    தங்களுக்கு எனது அன்பான நன்றிகள் ஐயா!.

    ---------------------------
    அன்புடைய வாசகர்களே சிவயோகசாரம் 07 பதிவில் நான் குறிப்பிட்டுள்ள மூன்று வலைத்தளங்களின் காரணகர்த்தா திரு. கேசவன் அவர்களின் மின்முகவரியில் kesavan1944@gmail.com யோகம் பயிலுபவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். தங்களுக்காக ஐயா அவர்களின் ஆனந்ஜோதி காத்திருக்கின்றது. சத்சங்கத்தில் கலந்து கொள்ளுங்கள். பேரின்ப பெருவாழ்வில் நிலைத்திருங்கள்.

    ReplyDelete