Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Showing posts with label அருட்சித்தர். Show all posts
Showing posts with label அருட்சித்தர். Show all posts

Thursday, December 19, 2024

 

திருச்சிற்றம்பலம் 

 அருட்சிவஞான பீடத்தின் 17 ஆம் ஆண்டில் 

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா 

( மார்கழி ஆயில்யம்) 

&

ஸ்ரீஅகத்தியர் - ஸ்ரீலோபமுத்திரா

5 ஆம் ஆண்டு 

திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

நாள்: 19.12.2024



Wednesday, December 27, 2023

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா & திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

 

திருச்சிற்றம்பலம் 

 அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டில் 

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா 

( மார்கழி ஆயில்யம்) 

&

ஸ்ரீஅகத்தியர் - ஸ்ரீலோபமுத்திரா

4 ஆம் ஆண்டு 

திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

நாள்: 30.12.2023



Sunday, August 13, 2023

நன்றி அருட்தோழி

அன்புடையீர், அருளுடையீர் வணக்கம்,

நான், கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக சிவ வழிபாட்டிலும், சித்தர்கள் வழிபாட்டிலும்  ஈடுபட்டு வருகின்றேன்.  

இருந்தாலும் போகர் மற்றும் கருவூரார் வழிபாட்டில் அதிகம் ஈடுபாடு இருந்தது.. அகத்தியர் வழிபாட்டில் ஈடுபட்டதில்லை... 

ஆனால், சிற்சில சோதனைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டு இறைவன் அருளால் எனக்கு நானே சில சுயபரிசோதனைகள் செய்து கொண்டதில்,   

ஸ்ரீஅகத்திய பெருமான் அருளாசியானது  என்னையும், அருட்சிவஞானபீடத்தை தேடி வந்துள்ளவர்களுக்கும்   

கடந்த ஆறு வருடங்களாக குறைவின்றி ஸ்ரீஅகத்திய பெருமானின் கருணை மழை பொழிகின்றது. 

வருடந்தோறும் ஸ்ரீஅகத்தியர் பெருமானுக்கு மார்கழி மாதத்தில்  திருக்கல்யாணம், 

மாதம் தோறும் பௌர்ணமி இரவில் ஸ்ரீஅகத்தியர் லோபமுத்ரா பல்லாக்கில் வலம் வருதல் 

போன்ற நிகழ்ச்சிகள் பெருமானின் கருணையினால் நமது அருட்சிவ ஞான பீடத்தில் நடந்தேறி வருகின்றது. 

எல்லாம் இறைவன் கருணை.. 

இதற்கு பல காரணிகளில் ஒரு  காரணியாக இருந்த 

அருட்தோழி-க்கு  நன்றிகள் பல . 

அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா

 அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா  

அன்புடையீர், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின் 

16 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்

 ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 

6 ஆம் ஆண்டு துவக்க விழா 

சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) ஸ்ரீசோபகிருது ஆண்டு ஆவணி மாதம்  1 ம் நாள்  ( 18.08.2023) அன்று காலையில்  நடைபெற உள்ளது. 

அச்சமயம்  சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், கும்ப பூஜை, சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.  

இந்நிகழ்வில்,

நேரில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ள 

வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு  

9943117734 என்ற எண்ணிற்கு 

Telegram App வழியில் செய்தியாகவோ 

அல்லது 

Arutsiva Gnana Peedam

https://t.me/+Lnt1AJsufxM3NTY9

மேற்படி  Telegram App குழுவில் இணைந்து கொண்டு 

 தமிழ்  அல்லது ஆங்கிலத்தில்  தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம்,  ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும்  ஆகியவற்றை எங்களுக்கு 

செய்தியாக (Text Message) மட்டும் 

அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  

தங்களால் குறிப்பிடப்படும்  தகவல்கள் அனைத்தும்

தெய்வீக சித்தர்கள் வழிபாட்டு சேவையின் அடிப்படையில்  ( எவ்வித கட்டணமும் இன்றி) உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல்லவை எல்லாம் பெற்று  வளமுடன் வாழ்ந்திடும் பொருட்டு 

 பௌர்ணமி நாட்கள், ஸ்ரீஅகத்தியர் திருக்கல்யாண விழா மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைகளுக்கு 

மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  


இங்ஙனம். 

அருட்சிவஞான பீட அன்பர்கள் 

அகில உலகம்.


Saturday, October 1, 2011

அருட்சித்தர்- தீர்க்கதரிசி- மாயாண்டி சுவாமிகள்- 81ம் ஆண்டு குரு பூஜை- திருக்கூடல் மலை


அருட்சித்தர்- தீர்க்கதரிசி- மாயாண்டி சுவாமிகள்- 81ம் ஆண்டு குரு பூஜை- திருக்கூடல் மலை
.........................................................

அருட்சித்தரான மாயாண்டி சுவாமிகள் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று திருவருள்  பெற்று அற்புதங்கள் பல ஆங்காங்கே நிகழ்த்திக் காட்டியருளினார்கள். தென்பதிகளை அவர் தரிசிக்கச் சென்றபோது அப்போதைய இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியும்,  சுவாமிகளை வரவேற்று நல்லாசியும் வாழ்த்துக்களும் பெற்றார்கள். அனைவராலும் சற்குரு மாயாண்டி சுவாமிகள் என போற்றப்பட்ட இவர் கட்டிக்குளத்திற்கு மேற்கே கருப்பனேந்தலில் தியானத்திருமடம் ஒன்றை உருவாக்கியருளினார்கள். அம்மண்டபம் ஞானபீடமாகப் புகழ் பெற்றது. பின்பு செளமிய ஆண்டு (1909) பங்குனி மாதம் விளாச்சேரி இ.பெரியசாமி வாத்தியார்,  விராட்டிபத்து பொன்னையா சுவாமிகள் ஆகியோருக்கு நல்லாசிகள் வழங்கி, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் அருள்பாலித்தார்கள்.
திருக்கூடல் மலையில் கட்டிக்குளம் அருள்மிகு மாயாண்டி சுவாமிகள் அருளாசி 
அருட்சித்தரான சுவாமிகள் திருக்கூடல் மலையை அ‍டைந்த மறுநாள் அதிகாலையில் சரவணப் பொய்கையில் நீராடி, அங்கே மண் எடுத்து, லிங்கமாகச் செய்து பூசை செய்தார்கள். பின்பு மலையின் மேல் பக்கத்தில் உள்ள குகை ஒன்றில்  அதனை ஆகம விதிப்படி வைத்து வழிபட்டார். அங்கேயே தங்கி தம்மை நாடிவரும் மெய்ஞ்ஞான அன்பர்களுக்கு மெய்ஞ்ஞான வாழ்வையும், உலகியல் பேறு  வேண்டுவோருக்கு சகல செல்வங்களையும் அருளாசியோடு வழங்கத்தொடங்கினார்கள். 
(ஆதாரம்-  மாயாண்டி சுவாமிகள் திருக்கூடல்மலை தலவரலாறு )
..........................................

(அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் வேண்டுவோருக்கும், உலகியல் துன்பம் நீங்கி இன்பம் வேண்டுவோருக்கும், வேண்டியதை வேண்டியபடியே  இன்றும் அரூப வழங்கியருளுகின்றார் மாயாண்டி சுவாமிகள்.  நீங்களும் ஒருமுறை திருக்கூடல் மலைக்கு சென்று சுவாமியின் சன்னதிக்கு சென்று வாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து விட்டாலும் இன்றும் என்னுடன் அரூபமாக தொடர்புகொண்டு அருளாசி செய்து வருகின்றார்கள். மானுடர்களின் பிறவிக் கணக்கை துல்லியமாக அறியக்கூடியவர் மாயாண்டி சுவாமிகள். நான் இந்தப்பிறவி எடுக்கும் முன்பாக வான்வெளியில் சுவாமிக்கு நான் கொடுத்த வாக்கை, இப்புவியில் நான் பிறவி ‍எடுத்த பிறகு, அவரின் இருப்பிடத்திற்கே,  2000 ம் ஆண்டு வாக்கில் (காந்தம் இரும்பை கவர்வது போல்) என்னைக் கவர்ந்து, அழைத்து, நினைவுபடுத்தி, "வந்து விட்டாயே" என்று கூறி அருளாசி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி குறித்து பிறிதொரு நேரம் பதிவிடுகின்றேன்.
இந்த சம்பவத்தின் காரணகர்த்தர்களுள்,  மாயாண்டி சுவாமிகள் திருக்கோயிலுக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் அருள்மிகு சிவப்பிரகாச சுவாமிகளும், மேற்படி சிவப்பிரகாச சுவாமிகள் திருக்கோயிலின் தற்போதைய நிர்வாகி திரு. செளந்தர்ராஜனும் ஆவார்கள். மாயாண்டி சுவாமிகள் சன்னதிக்கு செல்பவர்கள், அருகிலுள்ள சிவப்பிரகாச சுவாமிகள் சன்னதிக்கும் சென்று வாருங்கள். 

திருக்கூடல் மலையின் மீது உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்ற பின்னர், கடந்த 31.08.2011 அன்று முதல் முறையாக மதுரை நண்பர் ராம் (ராமசுப்பிரமணியன்) அவர்களுடன் மலையின் மீது செல்லும் அருட்பேறு எனக்கு கிடைத்தது.  ஆராவாரம் நிறைந்த மதுரை நகருக்கு அருகில் இப்படி ஒரு அமைதியும், ஆன்மீகமும் நிறைந்த திருக்கூடல் மலை என்னை ஆச்சரியப்படுத்தியது.  இந்த மலையில் ஆழ்நிலை தியானம் செய்ய விரும்புவர்களுக்கு ஏற்ற ‍சூழல் நிறையவே உள்ளது. எண்ணற்ற சித்தர்களின் அருளாற்றல் நிறைந்துள்ளதை உணரமுடியும். மலையின் மீதிருந்து பார்த்தால் மீனாட்சியம்மன் சன்னதியின் 
நான்கு கோபுரங்களும் தெளிவாக தெரிகின்றது. இங்கிருந்தே சொக்கநாதரையும், மீனாட்சியம்மனையும் சேவித்து மகிழலாம். மதுரை நகரின் ஆராவாரத்தில் எரிச்சலடைபவர்களும், பணிகளுக்கு இடையே ஆன்மீக சாதகம் செய்பவர்களும், வார இறுதி நாட்களில் இம்மலைக்கு சென்று மனமகிழ்ச்சி அடையலாம்.  ) 

கட்டிக்குளம் அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் 81ம் ஆண்டு குருபூஜை விழா மதுரை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுவாமியின் ஜீவசமாதி திருக்கோயிலில் 02.10.2011  அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியின் அருள்பெற வேண்டுகின்றேன். 

மேலும் செய்திகள் அறிய 
சுவாமியின் அருளுக்கு பரம்பரை பாத்தியப்பட்ட 
( உண்மையிலேயே எனக்கு பொறாமையாக இருக்கின்றது)
அன்புச் சகோதரர் திரு. ஆர். தட்சிணாமூர்த்தி அவர்கள‍ை தொடர்பு கொள்ளலாம். 

முகவரி :
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com
Website: www.soottukkole.org
*******************************************
திருக்கூடல் மலையின்மீது 31.08.2011 அன்று அலைபேசி மூலம் எடுத்த புகைப்படங்களை கீ‍ழே காண்க. 

மலையின் மீதுள்ள அபூர்வ மூலிகை

தியானக் குகையின் முன்பிருந்து மீனாட்சி அம்மன் கோயில் தோற்றம்

தியானக் குகையின் முன் நான் 

மலையிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் தோற்றம்

மலையிலிருந்து தோற்றம்



திருக்கூடல் மலையில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் 



மலையிலிருந்து - தியாகராஜர் பொறியியல் கல்லூரி தோற்றம்