Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Showing posts with label சரம். Show all posts
Showing posts with label சரம். Show all posts

Wednesday, October 13, 2010

சிவயோகசாரம் 08

சிவயோகசாரம் 06(07)ன் தொடர்ச்சி..

பிங்கலையின் பலனாவது

வலநாசியில் உண்டாகின்ற பிங்க‍லை வாயுவில் அதாவது சூரியநாடிக் காலத்தில் கஷ்டமான வேலை எதுவும் அப்பியசிக்க, எவ்வித கொடூரமான செய்கையும் செய்ய, ( அய்யோ! நமக்கு வேண்டாம் கொடூர செய்கை) போஜனம் செய்ய, மலம் கழிக்க, போகம் செய்ய, கடல் யாத்திரை போக, சண்டை செய்ய, படை எடுக்க, கஷ்டமான சாஸ்திரம் கற்க, குதிரை முதலாகிய நாற்கால் ஜீவன்களை வாங்க விற்க, மட்டமான மலை ஏற, குதிரை ஏற்றம், மல்யுத்தம் முதலாகிய பழக்கம் செய்ய, ஆறு குளம் கடல் முதலாகிய இடங்களில் நீந்த, உலோகங்களைக் குறித்த சாஸ்திரங்களைப் படிக்க, பாடம் எழுத, பணம் வாங்க கொடுக்க, எஜமானத்துவமான வேலை பார்க்க, அரசனைக் காண, இரண வைத்தியத்திற்கு மருந்து செய்ய, கடினமான ஆகாரம் ஜீரணிக்க இவை முதலாகிய செய்கைகள் செய்ய வேண்டு மென்பதாம்.

சுழுமுனையின் பலனாவது

சுழுமுனை நாடி, இரண்டு நாசியிலும் வரும் சுவாசம்.
அதை அதன் நடவடிக்கைக் காலத்திலேதான் அறியலாம்.
ஒரு கணத்தில் இட நாசியிலும், ஒரு கணத்தில் வலநாசியிலும் வரும் வாயுவானது இரண்டு நாசியிலும் வரும்போது சுழுமுனையாம்.
இந்த சுழுமுனை நடக்கும் காலத்தில் உலக நடவடிக்கைகளை நிறுத்தி விடவேண்டும். தவறி நடந்தால் அபஜெயமாம்.
எண்ணத்துக்கு விரோதமாய் நடக்கும் இந்த வாயுவின் காலத்திலே ஆத்துமத் தியானமும், பூசையும் செய்யலாம்.
இந்த வாயு நடக்குங் காலத்திலேதான் சுவாச பந்தனம் செய்யக்கூடும்.
இந்தச் சுவாசம் கட்டுவதனால் மனத்திற்கும் தேகத்திற்கும் இன்பம் உண்டாகின்றது.
//..... நாம் இதுவரை கண்ட மூன்று நாடிகளின் நிலைபற்றி அடுத்த பதிவில்  பார்க்கலாம்......//

Friday, October 8, 2010

சிவயோகசாரம் 07


சிவயோகசாரம் 07

சிவயோகசாரம் 06க்கு கருத்துரையிட்டிருந்த திரு. ஜெகதீஷ் அவர்களுக்கு பதில் கருத்துரை இட்ட பின்னர் எனக்குள் சாரல் மழை போன்ற இனம்புரியாத ஆனந்தம் தோன்றிய வண்ணம் இருந்தது. சிறிது நேர தியானத்தின் பின் உருவானதுதான் இந்த பதிவு சிவயோகசாரம் தொடர்ந்து படித்துவரும் இதனையும் படிக்க வேண்டுகின்றேன். சிவயோகசாரத்தின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம்.

இணையத்தில், இந்த அருட்சிவம் வலைப்பதிவின் கருத்துக்களைப் போன்று எண்ணற்ற ஆன்மீக அன்பர்கள் வலைப்பதிவுகளையும், இணைய தளங்களையும் நிறுவி நிர்வகித்து வருகின்றார்கள்.
நான் (எனும் எனது ஆத்மா), இச்சமயம் மானசீகமாக, அவர்களின் திருக்கரங்களை எனது கையில் எடுத்து, கண்களில் ஒற்றிக் கொள்கின்றேன்.

வாழ்க அவர்கள் நீடூழி!.
வளர்க அவர்களின் பணி!.

ஆனந்த வள்ளல் எனும் வலைப்பூவில் ஆனந்ஜோதி என்பவர் வாசியோகம் பற்றியும் மற்றும் பல விஷயங்களையும் எழுதியுள்ளார். மற்றும் அவரின் www.ourguru.net லும் நிறைய ஆன்மீக விஷயங்களை கூறியுள்ளார். மேலும் PDF வடிவில் சில மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய இணைப்புகளையும் கொடுத்துள்ளார்.
இவ்வலைதளத்தை காணும் திரு. ஜெகதீஷும் மற்ற ஆன்மீக அன்பர்களும் மேற்படி மின் நூலினை தரவிறக்கம் செய்து படித்து, தெளிந்து, பயன்பெற வேண்டுகின்றேன்.

இங்கே அன்னார் அவர்களின் தளத்திலுள்ள இரு மின் நூல்களை குறிப்பிடுகின்றேன்.  


 1. ஆத்ம தரிசனம் 
(PDF File, winzip file-ஆக சுருக்கப்பட்டுள்ளது File Size 26.1 MB)


2. அன்னையின் அருள்வழி
(PDF File, winzip file-ஆக சுருக்கப்பட்டுள்ளது File Size 14.3 MB)
மேற்படி நூல்களில் உள்ள சில வரிகளை JPG வடிவில் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.

 

இதே போன்ற ஒத்த எண்ணமுடையதுதான் இந்த அருட்சிவம் வலைத்தளமும்.

முதலில் ஆனந்த வள்ளல் தளத்திற்கு செல்லுங்கள், படியுங்கள்.
http://anandavallal.blogspot.com/

பின்னர்
http://ourguru.net/publications.aspx இந்த முகவரியில் சென்று மேற்கூறிய இரு மின்நூல்களையும் மற்ற மின்நூல்களையும் தரவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும்.
திரு. ஆனந்ஜோதியின் மற்றொரு தளம் இது
http://anandjothi.info
http://anandjothi.info/AboutUs.aspx
About Anand Jothi என்பதில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

//...Anand Jothi is a collection of disciples of Sathguru Dr. Nithyanandam. It is a spiritual organization whose values underlie the experience and messages of all the prophets down the ages across all religions and times in history.

We pay tribute to the Divine Cosmic Mother, who sustains the world and the Rishis and saints who uphold her principles for this world and beyond.

We believe:

There is a supreme, all encompassing force, divine and benevolent, called by different names by different religions.

All religions lead to the same goal and everyone of them deserves equal respect.

Every soul is originally and ultimately divine in nature, whatever attire it may wear in between.

There are methods by which every human being is capable of speeding up the process of realising the universal Truth and every soul making a sincere attempt in this direction will recieve Divine protection and help....//
 
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை.

பரம்பொருளே!,
அருட்சிவமே!,
என் தந்தையே!,
ஆனந்த கூத்தாடுகின்றேன்!,
நான் ஆனந்த கூத்தாடுகின்றேன்!!..........


மேற்படி மின்நூல்களை தரவிறக்கம் செய்து படித்து பார்த்துவிட்டு, அதை உருவாக்கியவர்களுக்கும், இந்த தளத்திற்கும் தங்களது கருத்துக்களை கருத்துரையாக இட வேண்டுகின்றேன்.
சிவயோகசாரம் தொடர், தொடர்ந்து வெளிவரும்.

Thursday, October 7, 2010

சிவயோகசாரம் 06

சிவயோகசாரம் 05ன் தொடர்ச்சி..

இடகலையின் பலனாவது

          இடகலை நடக்குங்காலம் தாகம், ஜலவிருத்தி, தீர்மானம் செய்ய, வேலை செய்ய, நகை செய்ய நகையணிந்து கொள்ள, அன்னிய தேசத்திலிருந்து யாத்திரை போக, வீடு சத்திரம் கோவில் கட்ட, தருமஞ் செய்ய, சாமான் சேகரஞ் செய்ய, கிணறு, குளம் வெட்ட, கல்யாணம் செய்ய, வஸ்திரம் கட்ட, வைத்திய சாஸ்திரம் அப்பியாசம், மருந்து, கற்பங்கள் முதலியவை செய்ய, சினேகிதரைக் காண, வியாபாரஞ் செய்ய, தானியம் இருப்புச் செய்ய, வீட்டிற்குக் குடிபோக, விதை விதைக்க, சமாதானஞ் செய்ய, அன்னியபாஷை அப்பியாசஞ் செய்ய, உபதேசஞ் செய்ய, பலனைப்பற்றி யாத்திரை போக, யானை, குதிரை ஏறி வேட்டைக்குப் போக, எஜமானாக, ஆடல், பாடல் கற்க, ஒரு புதிய ஊருக்குப் போக, பந்துக்களை காணவுமாகிய நடவடிக்கைகள் செய்தால் பயன்படும்.
          இடைகலையானது சரிவர நடந்தால், தேகம் செளக்கியமாக இருக்கும். இதில் ஆகாசத்தின் அம்சமிருக்குமானால் முன்சொன்ன நடவடிக்கைகளுள் ஒன்றும் செய்யக்கூடாது. இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும், மேற்சொன்ன வேலைகளை இடைகலையில் நடத்த வேண்டுமென்பதாம்.
//.. ஆகாசத்தின் அம்சம் பற்றி வரும் பதிவுகளில் வரும். அடுத்தது பிங்கலையின் பலன் பற்றியது//

Friday, August 27, 2010

சிவயோகசாரம் 01

இந்த அருட்சிவம் வலைப்பதிவில்  "அருட்சிவம்" "அருட்சிவம்01"  பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு நான் கற்றுணர்ந்தவைகளை உலக மக்களுக்கு எடுத்துக்கூறி எல்லவர்களையும் ஆன்மீக இன்பத்தில் திளைக்கச் செய்யும் நோக்கில் ''சிவயோகசாரம்'' எனும் நூலில் உள்ள விடயங்களை, தங்களுக்கு மேற்படி நூலில் உள்ளவாறும் சில இடங்களில் தற்காலத்தில் நடைமுறையில் உள்ள உரைநடை வாசகப்படியும், சில இடங்களில் எனது அனுபவங்களை இடைஇடையே கூறவும், எல்லாம் வல்ல அருட்சிவத்தின் துணைக்கொண்டும், சித்தர்களின் ஆசியோடும், நூலாசிரியர் பூரணாநந்தர் ஆசியோடும் முயற்சிக்கின்றேன். இந்த பதிவுகளில் / தொடரில்  எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகின்றேன். எனது இந்த முயற்சி வெற்றிபெற இதனை பார்வையிடும் வாசகர்களாகிய நீங்கள் தங்களது கருத்துரைகளை அனுப்ப வேண்டுகின்றேன். இந்நூல் (சிவயோகசாரம்) தொடர்பாக முன்னரே யாரேனும் வலைப்பதிவில் கூறியிருந்தால் அவ்வலைப்பதிவினை எனக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.

பூராணனந்தர் அருளிச் செய்த
சிவயோகசாரம்
சிறப்புப் பாயிரம்
அவையடக்கம்



'கனக வரை' என்னும் புருவத்திடை நடன ஒளி கேட்டானந்திக்கும் எந்தைமார்களே, உங்கள் பாதபங்கட்கு அனந்த வந்தனம்! அறிவிற் சிறியேன் குருமுகமாய் ஹிந்துஸ்தானியால் உணர்ந்த ராஜயோக மார்க்கத்தைப் பல நூல்களிலுள்ள அரும்பொருளொடு 'சிவயோகசாரம்' என வரைதலுற்றேன். நீரைப்பிரித்துப் பாலைக்கொள்ளும் அன்னத்தைப் போலக் குற்றம் தவிர்த்துக் குணத்தைக் கொள்ளக்கோருகின்றேன்.
அறுசீர் விருத்தம்


ஏத முற்ற பேதையேன் இயம்பு மிந்த யோகநூல்
பேத மற்ற போதமுற்றோர் பேசுவார்க ளாசையால்
வேத னைப்பட் டுழலு வாரிம் மெய்யுணராப் பொய்யரிப்
பூத லத்தி லுள்ளதீது புதுமை யன்று புலவிர்காள்.


நீர்வளம் முதலியவகைளால் சிறப்புற்றோங்கும் உத்தர தேசங்களில் பஞ்சாபு என்னும் பாஞ்சால தேசத்தில் அவதரித்தவராய், ஜீவேசுவர பேதாபேத முணர்ந்து நித்தியானுபவம் செய்யுங் பரம யோகீந்திரராய் ஸ்ரீஜனகாம்ஸ பூதரான உதாசி பாபா நானக் குரு பரம்பரையினர் அனேக வருட காலமாக அனுபவித்து வரும் இராஜயோகக் கிரமத்தை அச்சங்கத்திலொருவரும் ஞானசிரேஷ்டரும் தயாளகுண பரிபூரணருமான குரு சரண்தாஸ் பாபாஜி அவர்களால் இந்துஸ்தானி பாஷையில் உபதேசிக்கப்பெற்று, ஸ்ரீமத் நாராயண தேசிகர் நியமனத்தினால் இந்தத் தட்சிண தேசத்திலுள்ள சகல வருணாச்சிரமிகளும் உய்யும் பொருட்டுத் தமிழில் மொழி பெயர்த்து உபநிஷத்துகளிலும், யோகவாசிஷ்டம் பதஞ்சலியம், அடயோகம் முதலியவகைளிலுமுள்ள அரும்பொருளைச் சேகரித்துச் "சிவயோகசாரம்" என நற்பெயரமைத்து இதனை வெளியிடலாயிற்று.
இந்நூலைச் சாங்கோபாங்கமாக உணரும் புண்ணியர்கள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகளை அடைவரென்பது திண்ணம்.


அடுத்த பதிவில் குருவணக்கம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் திருவடிகளே போற்றி! பூரணானந்தர் திருவடிகளே போற்றி!