Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, August 15, 2022

அருட்சிவஞான பீடத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா

 அருட்சிவஞான பீடத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா  

அன்புடையீர், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) சுபகிருது ஆண்டு ஆவணி மாதம்  1 ம் நாள்  ( 17.08.2022) அன்று மாலையில்  நடைபெற உள்ளது. அவ்வமயம்  சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.  

வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு  

9943117734 என்ற எண்ணிற்கு 

Telegram Apps வழியாக 

 தமிழ்  அல்லது ஆங்கிலத்தில்  தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம்,  ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும்  ஆகியவற்றை எங்களுக்கு செய்தியாக (Text Message) மட்டும் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  தங்களால் குறிப்பிடப்படும்  தகவல்கள் பௌர்ணமி மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  


இங்ஙனம். 

அருட்சிவஞான பீட அன்பர்கள் 

அகில உலகம்.