Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, August 16, 2021

அருட்சிவஞான பீடத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா


 அன்புடையீர்,

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 4 ஆம் ஆண்டு துவக்க விழா சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) பிலவ ஆண்டு ஆவணி மாதம்  1 ம் நாள்  ( 17.08.2021) அன்று முற்பகலில் நடைபெற உள்ளது. அவ்வமயம்  உலக மக்களின் நன்மைக்கும், கொரானா நோய்த் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டும் சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.   தற்சமயம் நாட்டில் நிலவி வரும் கொரானா நோய்த் தொற்று தடுக்கும் பொருட்டு  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நோய் தடுப்பு  வழிகாட்டுதலின்  முக கவசம், கிருமிநாசினி பயன்படுத்துதல்  மற்றும்  சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு இந்த இணைப்பில் உள்ள படிவத்தில் தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம்,  ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும்  ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  தங்களால் குறிப்பிடப்படும்  தகவல்கள் பௌர்ணமி மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   

இங்ஙனம்.
அருட்சிவஞான பீட அன்பர்கள்
அகில உலகம்

சொடுக்கவும் (Click)
https://forms.gle/J2Eny7aXGbQWMYJx7

குறிப்பு:  சென்ற வருடம் கோரிக்கை அனுப்பியவர்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது... அவர்களுக்கு  மீண்டும் தற்போது பிரார்த்தனை செய்யப்படும்..

நன்றி.  .