Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Showing posts with label விளக்கம். Show all posts
Showing posts with label விளக்கம். Show all posts

Thursday, August 11, 2011

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 12 அவதார தினவிழா செய்தியுடன் ஒரு செய்தி


கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 12 அவதார தினவிழா செய்தியுடன் ஒரு செய்தி


திருப்பரங்குன்றம் காகபுஜண்டர் மலை அடிவாரத்தில் ஜீவ சமாதியில் வீற்றிருக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளோடு  சூட்சுமத்தில் எனக்கு தொடர்பு உண்டு என்பதை சுவாமிகளே என்னிடத்தில்  கடந்த 2000 ம் ஆண்டு வாக்கில் ஒரு அற்புத நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்கள். 
சென்ற பதிவும் சுவாமி சம்பந்தப்பட்ட செய்தியாக அமைந்துவிட்டது. இந்த பதிவும் சுவாமியின் செய்தியாகவே உள்ளது.  சுவாமிகள்  என்னை ஆட்கொண்ட நிகழ்வுகள் குறித்த சம்பவங்களை இந்த வலைப்பூவில் வெளியிட இது தருணம் என்றே உணர்கின்றேன். 
என் வாழ்வில் நிகழ்ந்த பெரும்பாலான அருட்சம்பவங்களை நான் பிறரிடம் அதிகம் விவரிப்பது கிடையாது.  தற்சமயம்  வலையுலகத்தில் சித்தர்கள் தொடர்பான விஷயங்களை பதிவேற்றி வரும்  என் அன்புக்குரியவர்களில் ஒருவர் ,  இக்கலிகாலத்தில்  முப்பத்தாறு தத்துவங்களை அறியாத அருட்சித்தர்கள் நிறைந்த காலகட்டத்தில்  வாழ்வது கொடுமையிலும் கொடுமை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.  அவர் ஆதங்கப்படுவது போல்  தத்துவங்களை அறியாத அருட்சித்தர்களுக்கு நடுவில்  முப்பத்தாறு தத்துவங்களும். தொன்னூற்றாறு தத்துவங்களுக்கும் மேலான இறைநிலையில் ஒன்றத்துடிக்கும்  அருட்சித்தர்களும் உளர் என்றும், அவர்கள் தங்களின் கர்ம கணக்கினை சரிசெய்யவும், அதே சமயத்தில் அண்டியவர்களுக்கு அருளாசி வழங்கிடவும்  பிறவி எடுத்துள்ளனர் என்பதை விரைவில்  இங்கு தெரிவிக்க உள்ளேன்.  
"அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி" என்று வள்ளற்பெருமானார் பாடியுள்ளார். பெருமானார்  கூறுவது போல் பரம்பொருளாகிய அருளாளர் அனைவரின் உள்ளத்தே வருகின்ற தருணம் இது. விழித்திருந்தால் நாம் அனைவரும் தரிசிக்கலாம். 

காலம் நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல். 
என்னைப்ப பொறுத்தவரை  இந்த வலைப்பூவினை இன்னும் சரிவர அமைக்கவில்லை. இன்னும் வருங்காலத்தில் அருளாளர் கூட்டிவைக்கும் காலத்தில் சிறப்புடன் அமையும் என்பதில் வியப்பில்லை.  

என்றும் அன்புடனும். அருளுடனும்
அடியார்க்கும் அடியேன்
அருட்சிவஞான சித்தர் எனும் பா. முருகையன்

செய்தி


அன்புடையீர்,
வருகிற 12.08.2011 வெள்ளிக் கிழமை காலை 7.30 மணி - 9.00 மணிக்குள் கட்டிக்குளத்தை சேர்ந்த பட்டமான் கிராமத்தில் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் பிறந்த வீட்டில் சுவாமியின் 154ம் மாநிலத்தில் 12 வது அவதார விழா நடைபெறுகிறது. காலை 11.00 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும். 

அனைவரும் வருக. இறையருள் பெருக.

தொடர்புக்கு
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com
Website: www.soottukkole.org