நாடிகளின் நிலை
முதல் ஆதாரமாகிய மூன்று நாடிகளைப்பற்றியும் விவரமாகச் சொல்லுவோம். அதாவது மனிதர்களுக்கு எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை இருபத்து நான்கு. இவை எப்போதும் உறங்கிகொண்டிருக்கின்றன. இவைகளைக் குண்டலி சக்தி என்று ஆதிநாதர் அருளிச் செய்திருக்கின்றார்.
குண்டலி சக்தி மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது, பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழாகவும், இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும், இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்தக் குண்டலி சக்தியானது, பாம்பைப் போலச் சுற்றிக்கொண்டு சுவாதிஷ்டானத்திற்கு மேலாகவும், மணிபூரகத்திற்குக் கீழாகவும் இருக்கின்றது. இந்த இருபத்துநான்கு நாடிகளுள் பத்து நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றனர்.
இந்த பத்து நாடிகளில் முன் சொல்லிய மூன்று நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றபடியால், அதில் இடகலையானது தேகத்தின் இடது பாகத்திலும், பிங்கலையானது தேகத்தின் வலது பக்கத்திலும், சுழுமுனையானது தேகத்தின் மத்தியிலும் இருக்கின்றன.
இக்குண்டலி சத்தியைப் பற்றி விவரமாக பின்னே சொல்லப்படவிருக்கின்றது.
//..அடுத்த சிவயோகசாரம் 10 பதிவில் சில அனுபவ பூர்வமான விஷயங்களை பார்ப்போம். ..//
குண்டலி சக்தி மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது, பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழாகவும், இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும், இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்தக் குண்டலி சக்தியானது, பாம்பைப் போலச் சுற்றிக்கொண்டு சுவாதிஷ்டானத்திற்கு மேலாகவும், மணிபூரகத்திற்குக் கீழாகவும் இருக்கின்றது. இந்த இருபத்துநான்கு நாடிகளுள் பத்து நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றனர்.
இந்த பத்து நாடிகளில் முன் சொல்லிய மூன்று நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றபடியால், அதில் இடகலையானது தேகத்தின் இடது பாகத்திலும், பிங்கலையானது தேகத்தின் வலது பக்கத்திலும், சுழுமுனையானது தேகத்தின் மத்தியிலும் இருக்கின்றன.
இக்குண்டலி சத்தியைப் பற்றி விவரமாக பின்னே சொல்லப்படவிருக்கின்றது.
//..அடுத்த சிவயோகசாரம் 10 பதிவில் சில அனுபவ பூர்வமான விஷயங்களை பார்ப்போம். ..//