Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Showing posts with label அருட்சிவம். Show all posts
Showing posts with label அருட்சிவம். Show all posts

Thursday, December 19, 2024

 

திருச்சிற்றம்பலம் 

 அருட்சிவஞான பீடத்தின் 17 ஆம் ஆண்டில் 

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா 

( மார்கழி ஆயில்யம்) 

&

ஸ்ரீஅகத்தியர் - ஸ்ரீலோபமுத்திரா

5 ஆம் ஆண்டு 

திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

நாள்: 19.12.2024



Wednesday, December 27, 2023

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா & திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

 

திருச்சிற்றம்பலம் 

 அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டில் 

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா 

( மார்கழி ஆயில்யம்) 

&

ஸ்ரீஅகத்தியர் - ஸ்ரீலோபமுத்திரா

4 ஆம் ஆண்டு 

திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

நாள்: 30.12.2023



Sunday, August 13, 2023

நன்றி அருட்தோழி

அன்புடையீர், அருளுடையீர் வணக்கம்,

நான், கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக சிவ வழிபாட்டிலும், சித்தர்கள் வழிபாட்டிலும்  ஈடுபட்டு வருகின்றேன்.  

இருந்தாலும் போகர் மற்றும் கருவூரார் வழிபாட்டில் அதிகம் ஈடுபாடு இருந்தது.. அகத்தியர் வழிபாட்டில் ஈடுபட்டதில்லை... 

ஆனால், சிற்சில சோதனைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டு இறைவன் அருளால் எனக்கு நானே சில சுயபரிசோதனைகள் செய்து கொண்டதில்,   

ஸ்ரீஅகத்திய பெருமான் அருளாசியானது  என்னையும், அருட்சிவஞானபீடத்தை தேடி வந்துள்ளவர்களுக்கும்   

கடந்த ஆறு வருடங்களாக குறைவின்றி ஸ்ரீஅகத்திய பெருமானின் கருணை மழை பொழிகின்றது. 

வருடந்தோறும் ஸ்ரீஅகத்தியர் பெருமானுக்கு மார்கழி மாதத்தில்  திருக்கல்யாணம், 

மாதம் தோறும் பௌர்ணமி இரவில் ஸ்ரீஅகத்தியர் லோபமுத்ரா பல்லாக்கில் வலம் வருதல் 

போன்ற நிகழ்ச்சிகள் பெருமானின் கருணையினால் நமது அருட்சிவ ஞான பீடத்தில் நடந்தேறி வருகின்றது. 

எல்லாம் இறைவன் கருணை.. 

இதற்கு பல காரணிகளில் ஒரு  காரணியாக இருந்த 

அருட்தோழி-க்கு  நன்றிகள் பல . 

அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா

 அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா  

அன்புடையீர், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின் 

16 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்

 ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 

6 ஆம் ஆண்டு துவக்க விழா 

சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) ஸ்ரீசோபகிருது ஆண்டு ஆவணி மாதம்  1 ம் நாள்  ( 18.08.2023) அன்று காலையில்  நடைபெற உள்ளது. 

அச்சமயம்  சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், கும்ப பூஜை, சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.  

இந்நிகழ்வில்,

நேரில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ள 

வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு  

9943117734 என்ற எண்ணிற்கு 

Telegram App வழியில் செய்தியாகவோ 

அல்லது 

Arutsiva Gnana Peedam

https://t.me/+Lnt1AJsufxM3NTY9

மேற்படி  Telegram App குழுவில் இணைந்து கொண்டு 

 தமிழ்  அல்லது ஆங்கிலத்தில்  தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம்,  ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும்  ஆகியவற்றை எங்களுக்கு 

செய்தியாக (Text Message) மட்டும் 

அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  

தங்களால் குறிப்பிடப்படும்  தகவல்கள் அனைத்தும்

தெய்வீக சித்தர்கள் வழிபாட்டு சேவையின் அடிப்படையில்  ( எவ்வித கட்டணமும் இன்றி) உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல்லவை எல்லாம் பெற்று  வளமுடன் வாழ்ந்திடும் பொருட்டு 

 பௌர்ணமி நாட்கள், ஸ்ரீஅகத்தியர் திருக்கல்யாண விழா மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைகளுக்கு 

மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  


இங்ஙனம். 

அருட்சிவஞான பீட அன்பர்கள் 

அகில உலகம்.


Thursday, August 18, 2011

அருட்சிவஞான பீடம்


அருட்சிவஞான பீடம்

நான்காம் ஆண்டு துவக்கம்.

நிகழும் கர ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் அருட்சிவஞானபீடத்தின் நான்காம் ஆண்டு துவக்க நாளாகும்.
கடந்த சர்வதாரி ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் ( 17.08.2008ல்) உலகிற்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாளன்று இப்பீடம் இறையருளால் துவக்கப்பட்டது. இப்பீடத்தால் மிகப்பெரிய அளவில் ஆன்மீகப் பணிகள் நடைபெறாவிட்டாலும் என் அளவில் சிற்சில ஞானப்பணிகள் நடைபெற்றுள்ளது.
அதில் ஒன்று மிகப்பழமையான சிவன் கோயிலுக்கு நந்தி எம்பெருமான் கற்சிலா விக்ரகம் (அவன் அருளாலே அவன் தாள் பணிந்து) அமைத்துக் கொடுத்தது. அந்தக் கோயிலின் சிவலிங்க வடிவம்தான். இந்த வலைப்பூவின் லோகோவில் அமைந்துள்ளது ஆகும். இத்திருக்கோயிலுக்கு நந்தி‍யெம்பெருமான் சிலா விக்ரகம் வந்த விபரம் பின்னர் ஒரு பதிவில் தெரிவிக்கின்றேன்.
இந்த அருட்சிவஞான பீடம் செயல்பாட்டின் பொருட்டு நான் பூசை செய்து வரும் எனது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலின் நிர்வாகத்தார் வசம் சில அனுமதி மற்றும் நிபந்தனை உறுதிமொழி குறித்தான விபரங்களை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இக்கடிதத்தின் PDF நகல் இதோ கீழே இணைத்துள்ளேன். சுட்டி படிக்கவும்.


இக்கடிதத்திற்கு ஊர் மக்களிடமிருந்தும், கோவில் நிர்வாகம் வசமிருந்தும் அனுமதி அப்பொழுது கிடைத்ததின் பொருட்டு பீடமும் ‍செயல்பட்டு வருகின்றது.
இப்பீடத்தின் அருட்செயல்பாடுகள் குறித்தான விபரங்கள் பின்னிட்டு நேரம் இருக்கும்போது பகிர்கின்றேன்.

Tuesday, November 9, 2010

சிவயோகசாரம் 11

சிவயோகசாரம் 10 ன் தொடர்ச்சி..

சுவாசம் என்றால் என்ன?.
சுவாசம் என்பது ஒரு தன்னிச்சை (Automatic)செயல்.

உடல், உயிர் இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி பினைந்திருக்க அவசியம் சுவாசம் தேவை.

உடலுள் உயிர் இருக்கின்றதா? உயிருள் உடல் இருக்கின்றதா? என்பதை அவரவர் அனுபவத்தின்கண் கண்டறியலாம்.

மனிதன் ஒரு பொம்மைக்கு சாவி கொடுத்து இயங்க செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் கொடுத்த சாவியின் வேகம் குறைந்ததும் பொம்மையின் இயக்கம் தன்னாலே நின்றுவிடும்.

அதேபோன்று நம்மை படைத்த இறைவன் நமக்கும், நமது வினைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவு விசை கொடுத்து தாயின் கருவறையிலிருந்து,  பூமிப் பந்தில் இறக்கி வைத்து  இயங்க விடுகின்றான். அவன் கொடுத்த விசை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாக இருக்கும். ஒருவருக்கு ஒரு முடுக்கு விசை, மற்றொருவருக்கு இரு முடுக்கு விசை, பிறிதொருவருக்கு மூன்று முடுக்கு விசை, இதேபோன்று பலருக்கும் பல்வேறு வகையில் பலதரப்பட்ட முடுக்கு விசை கொடுத்து தன்னிச்சையாக இயங்க வைத்து வேடிக்கை பார்க்கின்றான். இதற்கு மற்றைய சுவாசித்தலைக் கொண்ட உயிரினங்களும் விதிவிலக்கல்ல.

ஆனால், அவன்கொடுத்த விசையினால் தன்னிச்சையாக இயங்க வைத்ததோடுமின்றி இங்கே மனித இனங்களுக்கென்று தன்னிச்சையாக செயல்படும் புத்தியையும் கூடவே கொடுத்து இயங்க வைத்துள்ளான். அவன் கொடுத்த விசையின் (சுவாசத்தின்) காலம் முடிவதற்குள், தனக்கென்று கொடுத்துள்ள புத்தியைக் கொண்டு நாம் குட்டிக் கரணம் போடலாம், தோப்புக் கரணம் போடலாம், வீர வேசம் காட்டலாம், பிறரை அழிக்க நினைக்கலாம், செல்போன், கம்ப்யூட்டர், நானோ மேட்டர், ரோபோ (அட நம்ம இயந்திரன்தானுங்க) தயாரிக்கலாம். இன்னும் என்னென்னவோ செய்யலாம். அல்லது ஏன் என்னை இப்படி விசை கொடுத்து இயங்க வைத்தாய் என்று இறைவனிடமே அழுது புலம்பி சண்டைக்கும் போகலாம்.
எல்லாம் செய்யலாம். கூடவே நம்ம மேட்டரையும் (சுவாச பயிற்சிதாங்க) சேர்த்து செய்யலாம்.

இறைவன் கொடுத்த விசையின் காலம் முடிவதற்குள் நான் யார் என்பதை அறிந்து பரம்பொருளிடம் சரணாகதி அடைவதுதான் ஒரு வழி.
சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் இதைத்தான் சொல்கின்றனர். அப்படி இறைவனிடம் சரண் அடையும் வழிகளில் (மார்க்கங்களில்) இந்த சிவயோகசாரம் தொடரில்  கூறப்படும் வழியும் ஒன்று.
இறைவன் கொடுத்த சாவியின் விசைக்காலம் முடிவதற்குள்,  இறைவனிடம் முழுசரணாகதி அடையாவிட்டால், விசைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் நம்மை கையிலெடுத்து மீண்டும் விசை கொடுத்து விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பான் இறைவன்.

நிற்க,
மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியில் விடுகிறான் எனவும், இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான் எனவும் நம் முன்னோர்கள் அறிந்து கூறியுள்ளனர்.

எத்தனை நாள் நாம் சுவாசிப்போம் என்று யாராலும் கூறமுடியாது.(விதிவிலக்கு: சித்தர்கள்)

சுவாசம் என்பது அவசியமான ஒன்று.
நான் சுவாசிக்க மாட்டேன் என்று யாராலும் அடம் பிடித்து கூறமுடியாது. (நீங்க அடம் பிடிச்சு சொல்வீங்களா?.)

ஆனால் அந்த சுவாசத்தை (விசையை) முறைப்படுத்தி இறைவன் கொடுத்த விசையின் வேகம் குறைவதற்குள்(ஆயுள் முடிவதற்குள்), நான் யார் ? என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டு, அதன் விடையாக,  நான் பிரம்மத்தின் சொரூபம். ஆனால் நானே பிரம்மம் அல்ல.   எனது தாயும், தந்தையும், சுற்றத்தார் அனைவரும், உலக ஜீவராசிகள் அனைத்தும் அந்த பிரம்மத்தின் சொரூபம்தான் என்பதை அறிந்து, நான் எனும் எனது ஜீவஆத்மா பிரம்மத்தோடு ஐக்கியமாக முயற்சிசெய்வேன்.
ஒருக்கால் விசை முடிவதற்குள் என்னால் இறைவனோடு ஐக்கியமாக முடியாவிட்டால், ஒன்றும் கவலைப்படமாட்டேன். மறுபடியும் இறைவனிடம் வாய்ப்பு கேட்டு, விசை கொடுக்கச் சொல்லி மன்றாடி கேட்டுப் பெற்று (நீ விளையாடற ஆட்டம் எனக்கு தெரியும். இந்த தடவையாவது நான் ஜெயிக்கிறேன்னு சொல்லி) மீண்டும் இந்த பூமியில் விளையாட வருவேன்.

//...ரொம்ப பதிவில ஒரே கருத்தை (யோகம்,சரம்) பத்தி லெக்சர் அடிச்சா போரடிக்கும். அதான் கொஞ்சம் ரூட் மாத்தி இந்த பதிவுல தீபாவளி முடிஞ்சவுடன் இப்படி பதிச்சிருக்கேன்.. மறுபடியும் விளையாட அடுத்த பதிவுல வர்றேன்...//

Monday, August 23, 2010

அருட்சிவம் 01



சென்ற பதிவில் கூறியிருந்தபடி இந்த வலைப்பூ தோன்றக் காரணங்களில் சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவும் ஒரு காரணம் என்று கூறினேன். மேற்கொண்டு சில நிகழ்வுகளையும் இங்கு கூறுகின்றேன்.
நான் கிட்டத்தட்ட சுமார் 12 வருடங்களுக்கு மேல் கணினியை பயன்படுத்தி வருகின்றேன். அதாவது விண்டோஸ்95 க்கு முந்தைய பதிப்பு முதற்கொண்டு பயன்படுத்தி பார்த்துள்ளேன்.
1994 முதல் 2002 வரை சென்னை நகரில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வாசம். அப்பகுதியில் எனக்கு நிறைய ஆன்மீக நண்பர்கள் உண்டு. இக்காலத்தில் விக்கிரவாண்டி வி. இரவிச்சந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு "பேசும் ஆவிகள்" என்ற மாத இதழ் வெளி வந்து கொண்டிருந்தது. அதனை சென்னை திருவல்லிக்கேணி ஸ்டெர்லிங் பப்ளிகேஷன் நிறுவனத்தார் வெளியிட்டு வந்தனர். 1998 ஆம் ஆண்டு வாக்கில் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் மேற்படி இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட பின்னர், மீடியம் சி.எம். இரத்தினசாமி, மீடியம் திரு. ரங்கநாத கண்ணன், திரு. சாய்பாலு மற்றும் நான் (மீடியம் சாய்மீனன் )ஆசிரியர் பொறுப்பேற்று "பேசும் ஆவிகள்" மாத இதழை நடத்தி வந்தோம். ஸ்டெர்லிங் பப்ளிகேஷன் உரிமையாளர் திரு. வாசு அவர்கள் வாய்புற்று நோயினால் இளவயதிலேயே இயற்கை எய்திய பின்னர் மேற்படி இதழ் நின்று விட்டது. இக்காலத்தில் மதுரை நண்பர் இரசமணிச் சித்தர் சே. விஸ்வநாதன் அவர்கள் சித்தர் கலைகள் மற்றும் அமானுஷ்ய ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். அப்போது சித்தர்கள் பற்றியும், சித்தர்கள் கலையைப் பற்றியும், அமானுஷ்யங்கள் பற்றியும் இணைய இதழ் ஒன்று ஆரம்பிக்கலாம் ‍என்று எண்ணம் உருவானது. அக்காலத்தில் இணையத்தில் தமிழ் எழுத்துருவில் சில பிரச்சனைகள் தோன்றியது. சில காலம் கழித்து நான் எதிர்பார்த்தது போல் சித்தர்கள் என்ற பெயரில் டொமைன் நேம் கிடைக்கவில்லை. மேலும் சென்னையிலும் தமிழ்நாட்டிலும் ஹோஸ்ட்டிங் ஸ்பீடு வெகு குறைவாக இருந்த காரணத்தினால் மேற்படி எண்ணங்களை செயலாக்கம் செய்ய முடியாமல் போனது. பின்னர் எனது கவனத்தை இறைவன் மீதும் சித்தர்கள் மீதும் செலுத்தி வந்தேன்.
சமீபகாலமாக சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் யுனிகோட் என்ற புதிய டெக்னாலஜியும், வலைப்பூக்கள் என்னும் பிளாக்ஸ் டெக்னாலஜியும் தோன்றிய பின்னர், என்னைப் போன்றே எண்ணங்கள் கொண்ட எண்ணற்ற தமிழ் அன்பர்கள் ஆன்மீகம் மற்றும் சித்தர்கள் சம்பந்தப்பட்ட கருத்துக்களை இணையம் மூலம் பதிந்து வந்தனர். சமீப ஆண்டுகளாக ஸ்ரீ லங்கத்து தோழி மிகச் சிறப்பாக சித்தர்கள் இராச்சியம் பிளாக்கை நிர்வகித்து வருகின்றார். இன்னும் நான் எனது முதல் பதிவில் கூறியிருந்தவர்களும் மற்றும் பலரும் சிறப்பாக செய்து வருகின்றனர். இவர்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். தோழி பதிவேற்றும் பதிவுச் செய்திகளை பற்றி நான் முன்னமே அறிந்திருந்தாலும் கூட தோழி அவர்களின் முயற்சியையும், சித்தர்கள் மேலுள்ள ஈடுபாட்டையும், தோழியின் செயலாக்கத்திறனையும் நான் மிகவும் மெச்சுகின்றேன். எந்த ஒரு நல்ல செய்தியை யார் கூறினாலும் அச்செய்தி உலகமக்களுக்கு சென்று சேர்கின்றுதே என்று நினைப்பனே தவிர, நான் சொல்லவிரும்பும் விஷயங்க‍ளை பிறர் கூறிவிட்டனரே என்று ஆதங்கப்பட மாட்டேன். ஏனெனில் சித்தர்கள், சித்தர்கள் சம்பந்தப்பட்ட பாடல்கள், ஆன்மீகம், தேவாரம், திருவாசகம் உள்ளடக்கிய பன்னிரு திருமுறைகள், திருமந்திரம், திருஅருட்பா, இன்னபிற மெய்ச்சாத்திரங்களை பற்றி உலகறியச் செய்யும் வலைப்பதிவாளர்களை நான் மிகவும் வாழ்த்தி வணங்குகின்றேன்.


நிற்க,


தினசரி சித்தர்கள் இராச்சியத்தில் புதிய பதிவுகள் இடப்பட்டுள்ளதா? என்று பார்த்து படிப்பது வழக்கம். இடையில் 2010 ஆகஸ்ட் 4ம் தேதி பிரவுசரில் F4 கீயை அழுத்திவிட்டு http://siththarkal.blogspot.com என்பதற்கு பதிலாக தமிழ் உச்சரிப்பான சித்தர்கள் என்பதற்கு பழக்க தோஷத்தில் http://siddharkal.blogspot.com என்று டைப்செய்து Eenter பொத்தானை அமுக்கியவுடன் பிளாக்கர் டாட் காம் ஆனது மேற்படி முகவரியில் பிளாக் இல்லை. நீங்கள் ரிஜிஸ்டர் செய்கின்றீர்களா ‍என்ற செய்தியை அறிவித்தது. சற்று திகைத்துவிட்டேன். சித்தர்கள் பெயரில் டொமைன் நேம் கி‍டைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டவனுக்கு சித்தர்கள் அருளால் சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவை பார்க்கப்போய் அவர்களின் பெயரிலேயே ஒரு பிளாக் கிடைக்கின்றதே என்று மகிழ்ந்து உடன் ரிஜிஸ்டர் செய்து அதில் 2010 ஆகஸ்ட் 17ல் முதல் பதிவையும் வலையேற்றிவிட்டேன்.


சென்ற பதிவினைப் பார்த்த ஒரு பெயரில்லா அன்பர் கீழ்க்கண்டவாறு கமென்ட் அடித்துள்ளார்.
//உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்..//
இதற்கு நான் பதில் கமென்ட்டும் கொடுத்துள்ளேன்.
அதன்பின்னரும் அவர் கமென்ட் கூறியுள்ளார் கீழ்கண்டவாறு..
//அடுத்த பதிவில் இந்த வலைப்பதிவு ‍உருவாக காரணமாக இருந்த சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு பற்றியும், உருவான சூழ்நிலை பற்றியும், என்ன சொல்றீங்கன்னு பார்க்கணும்.. எப்போ அடுத்த பதிவு போடுவீங்க அதுக்கும் ஏதும் நல்ல நேரம் இருக்கா? //
இடையில் நான் 3 நாட்களாக கணினியைத் தொடவில்லை. அதனால் புதிய பதிவுகளை இட இயலவில்லை. (*காரணம் கீ‍ழே தனியாக குறிப்பிட்டுள்ளேன்) அதற்காக அந்த பெயரில்லா அன்பர் மீண்டும் ,கீழ்கண்டவாறு இன்று 23.08.2010ல் கமென்ட் அனுப்பியுள்ளார்.
// ஏய் சித்தனே! பதிவு போடலையா? பதிவு போடாமேலே இந்த பில்டப் கொடுககிரியேப்பா?//
// பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுசித்தரே.//
நானும் பயப்படாமல் கமென்ட்டை வெளியிட்டுவிட்டேன்.


அன்பு பெயரில்லாதவருக்கு வலைப்பதிவர்கள் சார்பாக தங்களுக்கு கீழ்கண்ட பதிலை கூற விரும்புகின்றேன்.
வலைப்பதிவு என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
வலைப்பதிவாளர்கள் தங்களது அனுபவங்களை, எண்ணங்களை, பிறரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற மேலான எண்ணத்தினால் பிளாக்கர்.காம் போன்ற இணையதளங்கள் கொடுக்கும் இலவச வசதியைக் கொண்டு, தங்களது பொன்னான நேரத்தில், பொதுநலனுக்காக சில மணி நேரங்கள் ஒதுக்கி, சொந்த உழைப்பில் டைப் செய்து வெளியிடுவதே வலைப்பதிவுகள் ஆகும். உங்களைப் போன்றவர்கள் மிக மட்டமான வார்த்தைகளைக் கொண்டு அனுப்பும் கமெண்ட்டுகளை தணிக்கை செய்யும் வசதியையும் பிளாக்கர்.டாம் கொடுத்துள்ளது. ஒரே ஒரு ஸ்பேம் என்ற பொத்தானை அழுத்தி உங்களைப் போன்றவர்கள் அனுப்பும் கமென்ட்டை அழித்துவிடமுடியும்.
posted by என்ற இடத்தில் வலைப்பதிவர்கள் கொடுக்கும் பெயரையே பிளாக்கர்.காம் இடும் இதுகூட உங்களுக்கு தெரியாதா?. வலைப்பதிவர்கள் வலைப்பதிவு போடாவிட்டால் நீங்கள் என்ன கழுத்தையா சீவி விடுவீர்கள்?. பயப்படாமல் போடுங்கள் என்று கூறுகின்றீர்களே ?. நான் போட்டுவிட்டேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?. என்னைப் படைத்த ஆண்டவனுக்கு நான் பயப்படுவதில்லை. ஏன்? எனில் என்னிடம் நேர்மை. உண்மை, உழைப்பு, நாணயம், இறைவனிடத்தில் மாறா பக்தி உள்ளது. உங்களுக்கு?. இனி நீங்கள் அனுப்பும் கமென்ட்ஸை நான் வெளியிடுவதாகவும் இல்லை. விருப்பம் இருந்தால் வலைப்பதிவை பாருங்கள். ,இல்லையெனில் உங்கள் விருப்பம்.


நிற்க. அன்பு வலைப்பதிவர், வாசக, வாசகிகளே! ஒரே ஒரு பெயரில்லாதவர் கமென்ட்டால் இந்த வலைப்பதிவில் ஆன்மீகம் தவிர்த்து சில விஷயங்கள் சூழ்நிலை காரணமாக கூற நேரிட்டது. இதை நான் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் மீண்டும் உங்களுக்கும் எனக்கும் இவை போன்ற கமென்ட்ஸ் வராமலிருக்க இந்த காட்டமான பதில்.


* எனது தம்பியின் மனைவியும், எனது மனைவியின் தங்கையுமானவருக்கு தலைப்பிரசவம் ( 19.08.2010 வியாழன், ஆண் குழந்தை) ஆனதால் கடலூர் அரசு மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்த காரணத்தால் 3 நாட்களாக கணினியில் தட்டச்சு செய்யமுடியவில்லை. 

இனி வாரந்தோறும் பதிவுகளை பதிவேற்ற முயற்சி செய்கின்றேன்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...