Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Sunday, August 13, 2023

நன்றி அருட்தோழி

அன்புடையீர், அருளுடையீர் வணக்கம்,

நான், கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக சிவ வழிபாட்டிலும், சித்தர்கள் வழிபாட்டிலும்  ஈடுபட்டு வருகின்றேன்.  

இருந்தாலும் போகர் மற்றும் கருவூரார் வழிபாட்டில் அதிகம் ஈடுபாடு இருந்தது.. அகத்தியர் வழிபாட்டில் ஈடுபட்டதில்லை... 

ஆனால், சிற்சில சோதனைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டு இறைவன் அருளால் எனக்கு நானே சில சுயபரிசோதனைகள் செய்து கொண்டதில்,   

ஸ்ரீஅகத்திய பெருமான் அருளாசியானது  என்னையும், அருட்சிவஞானபீடத்தை தேடி வந்துள்ளவர்களுக்கும்   

கடந்த ஆறு வருடங்களாக குறைவின்றி ஸ்ரீஅகத்திய பெருமானின் கருணை மழை பொழிகின்றது. 

வருடந்தோறும் ஸ்ரீஅகத்தியர் பெருமானுக்கு மார்கழி மாதத்தில்  திருக்கல்யாணம், 

மாதம் தோறும் பௌர்ணமி இரவில் ஸ்ரீஅகத்தியர் லோபமுத்ரா பல்லாக்கில் வலம் வருதல் 

போன்ற நிகழ்ச்சிகள் பெருமானின் கருணையினால் நமது அருட்சிவ ஞான பீடத்தில் நடந்தேறி வருகின்றது. 

எல்லாம் இறைவன் கருணை.. 

இதற்கு பல காரணிகளில் ஒரு  காரணியாக இருந்த 

அருட்தோழி-க்கு  நன்றிகள் பல . 

No comments:

Post a Comment