Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Friday, July 29, 2011

செய்திகள்


ஆடி அமாவாசை விழா


திருப்பரங்குன்றம் திருகூடல்மலை (புசுண்டர்மலை) மீது அமைந்துள்ள அருள்மிகு சோமப்பா ஜீவசமாதியில் 30.07.2011 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அருள்மிகு சோமப்பா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் மஹா தீபாராதனை நடைபெறும்.

தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


மாயாண்டி சுவாமிகளின் அருளாசி பெற்ற தவத்திரு க.இருளப்பகோனார் குரு பூஜை

நாள்: 31.07.2011 ஞாயிறு காலை 10 மணி.

அனைவரும் வருக. இறையருள் பெருக.

தொடர்புக்கு :  
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com  Website: www.soottukkole.org

Saturday, July 16, 2011

சிவயோகசாரம் 18


சிவயோகசாரம் 18
சிவயோகசாரம் 17ன் தொடர்ச்சி...
இப்பஞ்சதத்துவத்தைக் கண்டறிவதற்கு விவரம் சொல்லுவோம்.
1- வது தத்துவங்களின் நடை;
2-வது சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்:
3- வது சுவாசத்தினால் தத்துவத்தின் அடையாளம்;
4- வது தத்துவங்களின் நிறம்;
5 வது தத்துவங்களின் சுவை;
6 வது சுவாசத்தின் அளவு;
7வது தத்துவங்களின் அசைவு;
8 வது தத்துவங்களின் பலன்.
ஆகிய இந்த எட்டு விதங்களினால் பஞ்ச தத்துவத்தைக் கண்டறிய வேண்டும். 

மாணாக்கன் எந்த வாயுவில் எந்தத் தத்துவம் நடக்கிறதோ, அதனை கண்டறிய வேண்டும். மேலும், முக்கியமாகக் கவனிக்க வேண்டுவது பஞ்சேந்திரியங்களைச் சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு, தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக அப்பியாசிக்க வேண்டும். அதிகமாக அப்பியாசித்தால் அசெளக்கியம் நேரிடும். குரு எவ்வளவு பிரமாணஞ் சொல்லுவாரோ, அவ்வளவுதான் நடக்கவேண்டும்.

(1)இந்த சண்முகி முத்திரையை மூடிக்கொண்டு அப்பியாசிக்கும் காலத்தில் மஞ்சள் நிறம் தோன்றினால் பிருதிவி என்றும், வெண்ணிறம் தோன்றினால் அப்பு என்றும், சிவப்பு நிறம் தோன்றினால் தேயுவென்றும், பச்சை நிறம் தோன்றினால் வாயுவென்றும், கறுப்பு நிறம் தோன்றினால் ஆகாயமென்றும் சொல்லப்படும்.
(2) மாணாக்கன் கண்ணாடியைத் தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அதன்மேல் சுவாசத்தை விட்டால், அது நாற்சதுரமாக இருந்தால் பிருதிவி என்றும், அரையுருண்டை வடிவமாக இருந்தால் அப்புவென்றும், முக்கோணமாக இருந்தால் தேயுவென்றும், அறுகோண உருண்டை வடிவமாக இருந்தால் வாயுவென்றும், சிறுபுள்ளிகள் மாதிரியிருந்தால் ஆகாயமென்றும் அறிய வேண்டும்.
(3) மாணாக்கன் சுவாசம் விடும்போது சுவாசம் நேராகப் போனால் பிருதிவி, கீழாகப்போனால் அப்பு, மேலாகப்போனால் தேயு, ஒழுங்கீனமாய்போனால் வாயு, அடங்கிப்போனால் ஆகாசமென்று அறிய வேண்டும்.
(4) பிருதிவி -மஞ்சள், அப்பு- வெண்மை, அக்கினி- சிவப்பு, வாயு -பச்சை , ஆகாயம்- கருப்பு என இவைகளை கண்டறிய வேண்டும்.

தொடரும். ...


Thursday, July 14, 2011

சிவயோகசாரம் 17


சிவயோகசாரம் 17

சிவயோகசாரம் 16 ன் தொடர்ச்சி....
பஞ்ச தத்துவ நிலை

இனி, சூட்சும பஞ்சாட்சர தியானத்தின் ஆதாரமாகிய பஞ்ச தத்துவங்களைக் குரு சம்பிரதாயத்தால் அறிய வேண்டியதும், அந்தப் பஞ்ச தத்துவங்களின் குறிப்புகளின் விவரணமுங் கூறப்படும். அதாவது முன் சொன்ன மூன்ற நாடிகளின் குணங்களையும் சுத்தமாக அறிந்துகொண்டு ஒன்றை ஒன்றில் மாற்றிக் குண்டலியை அடையாமல் தத்துவங்களை அப்பியசிக்கலாகாது. முதலிற் சொல்லி இருக்கின்ற நாடிகளை தன் வசப்படுத்திக் கொள்ளாமல், யோகிகள் தத்துவங்களை குறித்து ஆரம்பிக்கப்பட்டது. போஜனம், மலம் கழித்தல், போகஞ் செய்தல் இவை மூன்றும் சூரிய நாடியில் செய்ய வேண்டுபவை. தாகம் ஜலவிருத்தி இவைகளை இடகலையில் செய்ய வேண்டும்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களும் மூன்று நாடிகளில் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டே வருகின்றன. இந்த தத்துவங்களைக் கண்டறிவதற்கு அடியில் வருமாறு கூறுவோம்.
அதாவது எவர்கள் இந்த மூன்று வாயுக்களை அப்பியசித்திருக்கிறார்களோ, அவர்கள்தாம் இந்த யோகத்திற்குரியவர்கள். இந்த உலகம் பஞ்சபூதத்தால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. இதனை கண்டுகொள்பவருக்கு ஆயுள் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்கள், பூஜை முதலாகிய உபசாரங்கள் செய்யப்பெற்று மேலாவார்கள்.
இந்து ஐந்து தத்துவங்களும் சத்திய லோகம், பூலோகம், மிருத்தியுலோகம் முதலாகிய இடங்களில் வியாபித்திருக்கின்றன. அவைகட்கு அன்னியமாக ஒரு வஸ்துவும் ஏற்படாது.

தொடரும்....