Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Thursday, November 11, 2010

சிவயோகசாரம் 12 (பிற தள இணைப்பு)

அருளுடையீர்! வணக்கம்,
இந்த சிவயோகசாரம் பதிவில் கூறப்படும் விஷயம் தொடர்பான கருத்துக்கள் பிற தளங்களிலும் உள்ளதை இறைவன் அருளால் பார்க்க நேர்ந்தது.
மேற்படி தளத்தில் உள்ள கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. நான் சொல்லவரும் சில கருத்துக்களை, எனக்கு முன்பே சிலர் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு எனது அருளார்ந்த நன்றிகள். 


அவ்வாறு நான் பார்த்தவைகளில்
திரு. ஹரிமணிகண்டன் அவர்களின் http://sadhanandaswamigal.blogspot.com ல் "சூட்சுமம் திறந்த திருமந்திரம்" என்ற தலைப்பில் உள்ள பதிவையும்  தாங்கள் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த பதிவில் உள்ள சில வரிகள் இதோ கீழே...

//...*இந்த மூச்சுக் காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம் ஒருமுகப்படும்.

* இறைவனைப் பற்றிக் கொண்டு மெய்ஞ் ஞான வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.

* பொய்ஞானம் எனும் மாயைகளில் சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு, மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய எதுவுமே வசப்படாது. முக்தி நிலையும் இவர்களுக்கு சாத்தியப்படாது.....//

//....வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்....//

//...இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.....//

மேற்படி பதிவின் இணைப்பிற்கு இங்கே சுட்டுக

சிவயோகசாரம் தொடர்பதிவை வாசிப்பவர்களுக்கு மேற்படி பதிவில் உள்ள விபரங்கள் பயன் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

// முன்னரே இந்த இணைப்பு பதிவை வாசித்தவர்கள் சற்று பொறுக்கவும். அடுத்த பதிவில் நான் வருகின்றேன்.//

No comments:

Post a Comment