Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, November 23, 2010

சிவயோகசாரம் 13

சிவயோகசாரம் 13

சென்ற சிவயோகசாரம்  பதிவுகளில் சுவாசம் பற்றி பார்த்தோம்.
  தற்போது சுவாசம் நடைபெறும் வடகலை, இடகலை, சுழுமுனையை நமது விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.

பொதுவாக சித்தர்களும், யோகிகளும் இம்முறையைப் பற்றி பலவாறாக கூறியுள்ளனர். இங்கே சில வழிகளை கூறுகின்றேன்.
  முதலில் உங்களுக்கு எந்த நாசியில் சுவாசம் நடக்கின்றது என்று கவனியுங்கள். மூக்கின் அருகே விரல்களின் மேற்பகுதியை கொண்டு சென்று மூச்சை சற்று வேகமாக வெளிவிடும்போது விரல்களின் மீது படும் சுவாசக்காற்று இடது மூக்கிலிருந்து அதிமாக வெளிவந்தால் இடகலை நடக்கின்றதென்றும், வலது மூக்கிலிருந்து அதிகமாக ‍வெளிவந்தால் வடகலை நடக்கின்றதென்றும், இருமூக்கிலும் சமமாக வந்தால் சுழுமுனை நடக்கின்றதென்றும் தெரிந்துகொள்ளலாம்.
நிற்க,
சுவாசம் இடகலை நடக்கும் சமயத்தில் அதனை வடகலையில் மாற்றும் முறையானது பின்வருமாறு:
நமது உடலானது புவியீர்ப்பு விசைக்கு உட்பட்டது என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ஈர்ப்பு விசை நமக்கு இங்கு உதவுகின்றது.
 இடப்பக்கம் ஒருக்களித்து படுத்தாலோ, இடது  கையினை   தலைக்கு  தாங்கு  கொடுத்து  படுத்தாலோ, இடது காலை தரையில் ஊன்றி ஒற்றைக்காலில் தவம் செய்வது போல் செய்தாலோ, இடது காலின் கட்டைவிரலின் மீது, வலது காலின் கட்டைவிரலை வைத்து அழுத்தம் கொடுத்தாலோ, அல்லது யோகிகள் பயன்படுத்தம் யோகதண்டத்தை (மரத்தால் செய்யப்பட்டது) இடது கையில் முட்டுக்கொடுத்து சித்தர்கள் தவத்தில் இருப்பது போன்று வைத்து தவம் செய்தாலோ சுவாசம் கண்டிப்பாக வலது நாசியில் நடைபெறும்.
வலப்பக்கம்  ஒருக்களித்து  படுத்தாலோ,  வலது  கையினை  தலைக்கு தாங்கு கொடுத்து படுத்தாலோ, வலது காலை தரையில் ஊன்றி ஒற்றைக்காலில் தவம் செய்வது போல் செய்தாலோ, வலது காலின் கட்டைவிரலின் மீது, இடது காலின் கட்டைவிரலை வைத்து அழுத்தம் கொடுத்தாலோ, அல்லது யோகிகள் பயன்படுத்தம் யோகதண்டத்தை  வலது கையில் முட்டுக்கொடுத்து சித்தர்கள் தவத்தில் இருப்பது போன்று வைத்து தவம் செய்தாலோ சுவாசம் கண்டிப்பாக இடது நாசியில் நடைபெறும்.
நமது உடல் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னும், பின்னும் சாயாமல் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி செய்தால் சுவாசம் சுழுமுனையில் நடக்கும். இதற்கு ஆசனத்தில் பத்மாசனம், சவாசனம், சாந்தியாசனம் உகந்தது.
இது எனது அனுபவ பூர்வ உண்மை.  என்னால் வடகலையை, சில நிமிடங்களில் இடகலையாகவும், இடதை வலமாகவும் மாற்ற முடியும். இந்த பதிவை எழுதும் போதும் பயிற்சி செய்துவிட்டுதான் எழுதுகின்றேன். உங்களாலும் முடியும். பயிற்சிதான் தேவை. தகுந்த குருமுகமாக அறிந்துகொண்டு விளக்கம் பெற்று நீங்களும் செய்யமுடியும். மிக எளிதானதுதான்.
  சித்தர்கள் யோகதண்டம் வைத்திருப்பதும் சுவாசத்தை கட்டுப்படுத்துவதற்குதான். சித்தர்கள் அருளால், எனது பூர்வஜென்ம பலத்தால், இந்தப்பிறவியில் எனக்கு  மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜ் சுவாமிகள் (இவர் ஒரு சிவயோகி. தன்னை நந்தியாகவே பாவித்து சிவனை சுமப்பவர். இவரை நான் முதன்முதலில் சந்தித்தது வடலூரில்)  மூலம் யோகதண்டம் கிடைத்தது. ( யோகதண்டம் கிடைத்த விதம் பற்றி பின்னர் சொல்கிறேன்) நான் அதை பயன்படுத்தி வருகின்றேன். இதே போன்று சித்தர்களின் ஒற்றைக்கால் தவமும் மிக சக்தி வாய்ந்தது. இல்லற வாசிகள் ஒற்றைக்கால் தவம் இருப்பதும், யோகதண்டம் பயன்டுத்துவதும் சற்றுக் கடினம். பூர்வபுண்ணிய பயன் இருந்தாலோ, விட்டுகுறை தொட்டகுறை இருந்தாலோதான் முடியும். இந்தப்பிறவியில் முதன்முதலாக வாசியோகம் செய்பவர்கள் இங்கு மேலே கூறிய எளிய முறையை பயன்படுத்தி பரிட்சார்த்தம் செய்து பார்க்கலாம். பார்க்க வேண்டுகிறேன்.  சித்தர்களுடன் தொடர்பு கொள்வதற்கு வடகலையில் அப்பியாசம் செய்து நிஷ்டையில் அமர வேண்டும். அவ்வாறு செய்தால் கண்டிப்பாக அவர்களின் ஆசிகிடைக்கும். உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். அவர்களின் தரிசனமும் கிடைக்கும். நான் ஒரு முறை போகர் பெருமானிடம் தொடர்பு கொண்டபோது பெருமானும் இதை உறுதிபடுத்தினார். (இதன் விபரமும் பின்வரும்.) 
நாடிசுத்திமுறை, பிராணயாமம், வாசியோகம் இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. இவை மூன்றும் ஒன்றல்ல. முதல் இரண்டும் அடிப்படை. மூன்றாவது அருளைத் தருவது. பல்வேறு உண்மைகளை உங்களுக்கு விளக்குவது. முதல் இரண்டினை இல்லறவாசிகள் எளிதாக செய்யலாம். மூன்றாவது சற்றுக் கடினம். முயற்சி இருந்தால் வெற்றி கிடைக்கும். உங்களுக்கும் சித்தர்களின் அருளால் வெற்றி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
//.....தொடரும்.....//

No comments:

Post a Comment