Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, November 8, 2011

கோரக்க சித்தர் குருபூஜை


 கோரக்க சித்தர் குருபூஜை - நாள் : 10.11.2011


ஒவ்வொரு தமிழ் ஐப்பசி மாதமும் (பெளர்ணமி) பரணி நட்சத்திரத்தில் மகான் கோரக்க சித்தரின் குருபூஜை விழா நடைபெறும் என்பது சித்தர்களை பூஜிப்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அது போன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மூகாசாபரூர் ( பரூர்பட்டி) ஊரிலுள்ள கோரக்கரின் ஜீவசமாதி ஆலயத்திலும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. (மேற்படி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதாக அன்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்).
இந்த ஐப்பசி பெளர்ணமியன்று அருட்சிவஞான பீடத்தில் பெளர்ணமி பூஜை, பிரார்த்தனை, வேள்வி நடைபெற உள்ளதால், என்னால் எங்கும் செல்ல இயலவில்லை. இந்த பெளர்ணமி இரவில் கோரக்க சித்தரின் திருவடியைப் பிடித்துக்கொண்டு வழிபாடு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளேன். இறைச்சித்தமும், சித்த சித்தமும் அருள் புரிய வேண்டும். 
நான் சித்தர்கள் வழியில் நிற்பதால்,  கோரக்க சித்தரோடு அவ்வப்போது தொடர்பு கொண்டு அருளாசி பெற்று வருவது வழக்கம். இதற்கிடையில் , நேற்றைய தினம் ( 07.11.2011) வடலூரில் சத்திய ஞானசபைக்கு அருகில் உள்ள ஒரு புத்தகக்கடையில் சித்தர்கள் தொடர்பான புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கும் போது, பாட்டுச்சித்தர் ஓம் சக்தி நாராயண சாமி அவர்கள் எழுதிய ஸ்ரீகோரக்க சித்தர் கதையும் கருத்தும் ( கோரக்கர் அருளிய சந்திர ரேகை 200 மூலமும் உரையும்) என்ற நூல் கிடைத்தது. அதில் கோரக்க சித்தரின் வரலாறு மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
மேலும் சந்திர ரேகை 200 -க்கு தெளிவுரையும் மிகுந்த கருத்துச்செறிவுடன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  சித்தர்கள் வழிபாடு செய்பவர்கள்  அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டிய நூல் இது ஆகும்.  சித்தரின் குருபூஜையை ஒட்டி இந்த நூல்கிடைத்தது எனக்கு மிக மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நில்லாமல்,  இன்று 08.11.2011 ல் வடலூர் வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞானசபைக்கும்,  சத்திய தருமச்சாலைக்கும் கன்னியாகுமரி பால பிரஜாபதி அடிகளார் (அய்யாவழி) வருகை தந்திருந்தார்கள். அவர் வரும் சமயம் நான் கோரக்கரின் சந்திர ரேகை 200 நூலினை படித்துக்கொண்டிருந்தேன். உடனடியாக அடிகளாரிடம் சந்திர ரேகை 200 நூலில் தங்களின் கையொப்பம் இட்டு தரும்படி கேட்டு, அப்படியே அவரும் நூலில் கையெழுத்திட்டு கொடுத்து என்னைப்பற்றி விபரங்களை கேட்டு அறிந்து, ஆசியும் வழங்கினார். அடிகளாரிடம் ஆசி பெற்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. 
நிற்க, வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தரின் குருபூ‍ஜை விழா மிகச்சிறப்பாக நடைபெறும் என்று லட்சக்கணக்கான அன்பர்கள் அவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் பாட்டுசித்தர் ஓம் சக்திநாராயணசாமி அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், எந்த ஒரு விஷயத்தை இந்த வலைத்தளத்தில் குறிப்பிடுவதாக இருந்தாலும் அதனைப்பற்றி இணையத்தில் search செய்துவிட்டுதான் பதிவெழுத ஆரம்பிப்பேன். கோரக்கர் சித்தர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கும் குறிப்பிடலாம் என்று நான் நினைத்திருந்ததால், அதற்கு வேலையே இல்லாமல் எனக்கு முன்பே சில அன்பர்கள் வலையுலகத்தில் பதிவேற்றியுள்ளார்கள். அவர்களுக்கு இறைவனும், சித்தர்களும் சகல சித்திகளையும், சக்திகளையும், அருளையும் அளிப்பார்கள் என்று எண்ணலாம். வரும் பதிவுகளில் கொல்லி மலை பயணத்தின் போது, கோரக்கர் குகை சென்று வந்தது ( மிகசுவராசியமான, ஆன்மீகமான)  குறித்து பதிவேற்ற முயற்சிக்கின்றேன். இறைவனும் சித்தர்களும் அருள்புரியவேண்டும். 

நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த விபரங்களை, அந்ததந்த தளத்தின் முகவரியை கொடுத்துள்ளேன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 
( முன்னரே இந்த பதிவுகளை படித்தவர்கள் தவிர்த்துவிடலாம். )

 1. கோரக்கர் பற்றிய சில தகவல்கள் 
http://18siddhar.blogspot.com/2011/11/blog-post.html
மேற்காணும் இனணப்பில் வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தரின் ஜீவசமாதி புகைப்படம் உள்ளது. 
அவசியம் பார்க்க வேண்டிய பதிவு.

2. சித்தர்கள் வரலாறு-10
http://vs-sk.blogspot.com/2011/07/10.html
இந்த தளம் சித்தர்கள் வரலாறு பற்றி கூறுகின்றது. இதில் கோரக்க சித்தரின் வரலாறும் உள்ளது.  

3. ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்
http://bhogarsiddhar.blogspot.com/2011_01_01_archive.html
இந்த பதிவு நான் தேடியதில் ஆச்சர்யப்பட வைத்தது.  ராசி நட்சத்திரத்திற்கேற்ப வழிபடவேண்டி சித்தர் தலங்கள் குறித்து ஒரு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 
இதில் எனது பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி க்கு குறிப்பிட்டுள்ள ஸ்தலத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம். எந்த மதுரையை நோக்கியும், சுந்தரானந்த சித்தரை நோக்கியும், திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர் ஸ்தலத்தை நோக்கியும் நான் செல்கின்றேனோ அதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்லாடம்பட்டி பற்றி நான் இதுவரை அறியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன். 
நீங்களும் உங்களுக்கேற்ற ராசி நட்சத்திரத்தின்படி பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பிடப்பட்டுள்ளவை உங்களுக்கு சரியாக வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம். அனைத்து 

சித்தர் ஜீவசமாதிகளையும் தரிசித்து ஆனந்தம் கொள்ள ஏதுவாக இருங்கள். சித்தர்களின் கருணைப்பார்வை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.