Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, October 4, 2010

வள்ளலார் அவதார தினம் & சத்தியஞானசபை முன்மண்டபம் திறப்பு விழா


அன்புடையீர்! அருளுடையீர் ! வணக்கம்,
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சத்திய ஞானசபை முன்மண்டபம் திறப்பு விழா 02.10.2010ல் மாண்புமிகு தமிழக அரசு நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் திருக்கரத்தால் திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் சுற்றுலாத்துறை நிதியின் மூலம் ரூ. 68 லட்சம் மதிப்பீட்‍டில் பல்வேறு அடிப்படைகள் வசதிகள் செய்யப்பட்டதின் நிறைவு விழாவும் இனிதே நடந்து முடிந்தது.
அடுத்து, சிதம்பரம் இராமலிங்க அடிகளார் என்னும் திருஅருட்பிரகாச வள்ளற் பெருமானாரின் 188 வது அவதார தினவிழா வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 05.10.2010ல் இனிதே நடைபெற உள்ளது. மேற்படி விழா நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளில் கணினி வகையான வேலைகளை மிக அதிக அளவில் நான் செய்ய வேண்டி இருந்ததால், அருட்சிவம் வலைப்பதிவில் கடந்த 13 நாட்களாக என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
மேலும், கடந்த 10 தினங்களுக்கு முன் ஜேசிபி (பொக்லைன் ) இயந்திரம் மூலம் சத்தியஞானசபை மைதானத்தில் சுற்று மதிற்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியில் புதைத்திருந்த தொலைபேசி கேபிளானது பல இடங்களில் துண்டாகிவிட்டது. அவ்வளவுதான். இந்த பகுதியில் இருந்த பல நூறு தொலைபேசிகள் இயங்க வில்லை. பிராட்பேண்ட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இணைப்பினை பி.எஸ்.என்.எல். ன் மெத்தன போக்கிற்கு பிறகு 02.10.2010ல் சரி செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் வலைப்பதிவை தொடர முடியவில்லை. அவ்வப்போது நண்பரின் கணினியில் இருந்து அவ்வப்போது வரும் கமென்ட்ஸ்களை ஆக்டிவேட் செய்தேன்.
இனி அருட்சிவம் வலைப்பதிவு தொடரும்.


வள்ளற் பெருமானாரின்  188வது அவதார தினம்
05.10.2010 



திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்! சரணம்! 
சற்குருநாத சுவாமிகள்  திருவடிகளே சரணம்! சரணம்!

திருஅருட்பிரகாச வள்ளலார்  


சத்திய ஞானசபை முன்மண்டபம் பகல் தோற்றம் 


சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் 


சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் ( முன்புறம்) 

சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் ( உட்புறம்)  

சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் ( உட்புறம்)   


சத்திய தருமச்சாலை பிரசங்க மேடை   


சத்திய ஞானசபையில் 02.10.2010 ல் மாதப்பூச ஜோதி தரிசனம்    

புதிய முன்மண்டபத்துடன் கூடிய சத்திய ஞானசபை வெளிப்புறத் தோற்றம்

No comments:

Post a Comment